
தமிழகத்தின் கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் இன்று இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, மதுரை, சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழகத்தின் பிற பகுதிகள் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும், சென்னை புறநகர் பகுதிகளில் மாலை மற்றும் இரவு நேரங்களில் மிதமான மழை எதிர்பார்க்கப்படுகிறது.