
மட்டக்களப்பு மாவட்டம் துறைநீலாவணையில் உள்ள வீடொன்றில் 24.5 பவுன் தங்க நகைகளைத் திருடியதாக யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை (02) நடந்த இந்தத் திருட்டுச் சம்பவத்தில், பாதிக்கப்பட்ட வீட்டில் தங்கி கல்வி பயின்று வந்த யுவதி ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.
களுவாஞ்சிகுடி பொலிஸார் திருடப்பட்ட அனைத்து நகைகளையும் மீட்டு, சந்தேகநபரான யுவதியை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியுள்ளனர்.