
ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களுக்குச் சொந்தமான காலியான நிலங்களில் சூரிய மின் சாதனங்கள் பொருத்தி மின் உற்பத்தி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஒரே இடத்தில் 10 ஏக்கர் மற்றும் அதற்கு மேற்பட்ட நிலம் உள்ள விவரங்களை அனுப்பி வைக்கும்படி மண்டல இணை ஆணையர்களுக்குத் துறை கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.
மின் வாரியத்திற்கு மின்சாரம் வழங்குவதன் மூலம் கோவில் வருவாயைப் பெருக்குவதோடு, நிலங்களைப் பாதுகாப்பாக வேலி அமைத்து பராமரிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.