
ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா, மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
வரும் 5ஆம் தேதி பணக் கொள்கைக் குழு கூட்டம் நடைபெறவுள்ள நிலையில் இந்தச் சந்திப்புக்கு முக்கியத்துவம் ஏற்பட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் ரெப்போ வட்டி விகிதம் 5.25 சதவீதமாக மாற்றமின்றி நீடித்த நிலையில், அடுத்த மாதம் வட்டி விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் உயர்த்த வேண்டும் என்று ஸ்டேட் வங்கி ஆராய்ச்சி அறிக்கை பரிந்துரைத்துள்ளது.