
கர்நாடகாவின் கபினி அணையில் இருந்து திறந்துவிடப்பட்ட உபரிநீர் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவை வந்தடைந்த நிலையில், நீர்வரத்து வினாடிக்கு 18,000 கன அடியாக அதிகரித்துள்ளது.
இன்று அதிகாலை வினாடிக்கு 1,000 கன அடியாக இருந்த நீர்வரத்து, காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையினால் படிப்படியாக உயர்ந்துள்ளது.
மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் பிலிகுண்டுலு பகுதியில் நீர் அளவீடுகளைத் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், நீர்வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.