
உள்நாட்டு வாகன உற்பத்தி அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பால், வாகன உதிரிபாக உற்பத்தி நிறுவனங்களின் பங்குகள் நேற்று ஒரே நாளில் 7 சதவீதம் வரை உயர்ந்துள்ளன.
கேப்ரியல் இந்தியா நிறுவன பங்கு 1,584.20 என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ள நிலையில், கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் இத்துறை பங்குகள் 56 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளன.
நடப்பு நிதியாண்டில் வாகன உதிரிபாக துறை 8 முதல் 10 சதவீதம் வரை வளர்ச்சி காணும் என்று இந்திய ஆட்டோ உதிரிபாக உற்பத்தியாளர்கள் சங்கம் கணித்துள்ளது.