
தமிழகத்தில் நாளை (ஆக.14) நீலகிரி மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் தருமபுரியில் அதிகபட்சமாக 7 செ.மீ மழையும், கோவை மாவட்டம் சோலையாரில் 5 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.
ஆகஸ்ட் 19 வரை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மீனவர்களுக்கான எச்சரிக்கைகளும் விடுக்கப்பட்டுள்ளன.