
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அடிப்படை உரிமைகளை வலியுறுத்தி கூட்டு அவாமி நடவடிக்கை குழு விடுத்த பொது வேலைநிறுத்தத்தால் இயல்பு வாழ்க்கை முடங்கியது.
வணிக மையங்கள், உள்ளூர் சந்தைகள் மற்றும் பொது போக்குவரத்து முழுமையாக நிறுத்தப்பட்டதால், முக்கிய சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.
போராட்டங்களை ஒடுக்க இணைய முடக்கம் மற்றும் ஊடக தடைகளை பாகிஸ்தான் அரசு விதித்துள்ள நிலையில், மக்கள் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.