
அலாஸ்கா கடலில் எரிபொருள் தீர்ந்து சிக்கிய படகுக்கு, அருகில் இருந்த மார்க் ஜூக்கர்பெர்க்கின் 2,500 கோடி ரூபாய் மதிப்பிலான சொகுசுப் படகு உதவி செய்ய மறுத்ததாகப் புகார் எழுந்தது.
சர்ச்சை தீவிரமடைந்த நிலையில், அந்தச் சம்பவத்தின்போது ஜூக்கர்பெர்க்கோ அல்லது அவரது குடும்பத்தினரோ படகில் இல்லை என அவரது செய்தித் தொடர்பாளர் விளக்கம் அளித்துள்ளார்.
மாலுமிகள் வேறு ரேடியோ அலைவரிசையில் இருந்ததால் உதவி கோரிய அழைப்பு அவர்களுக்குக் கேட்கவில்லை என்றும், அதற்குள் மற்றொரு சுற்றுலாப் படகு மீட்புப் பணியைத் தொடங்கிவிட்டது என்றும் அவர் தெரிவித்தார்.