
சாமராஜநகர் மாவட்டம் காவிரி வனவிலங்கு சரணாலயத்தில் சட்டவிரோதமாக வேட்டையாடிய 3 தமிழர்களை வனத்துறையினர் சுட்டுக்கொன்றனர்.
மானை வேட்டையாடிப் பங்கு பிரிக்கும்போது வனத்துறையினருடன் ஏற்பட்ட மோதலில், வனத்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மூவர் உயிரிழந்தனர்.
சம்பவத்தைத் தொடர்ந்து வனத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால், அப்பகுதியில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.