
படப்பிடிப்பு முடிந்து கேரவனில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தபோது, உதவி இயக்குநர் ஒருவர் அனுமதி இன்றி உள்ளே நுழைந்ததாக நடிகை காஜல் அகர்வால் தெரிவித்துள்ளார்.
அந்த நபர் தனது சட்டையைக் கழற்றி, மார்பில் இருந்த காஜல் அகர்வாலின் பெயரிலான டாட்டூவைக் காட்டியதால் தான் அதிர்ச்சியடைந்ததாக அவர் கூறியுள்ளார்.
காஜல் அகர்வால் நடிப்பில் 'தி இந்தியா ஸ்டோரி' திரைப்படம் கடந்த ஜூலை 24 அன்று திரையரங்குகளில் வெளியானது குறிப்பிடத்தக்கது.