
பிரான்சின் லேண்டஸ் மாகாணத்தில் ஏற்பட்ட பயங்கர காட்டுத்தீயால் 525 கிராம மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
102 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் மற்றும் பலத்த காற்று காரணமாக, தீ 2,700 ஏக்கர் பரப்பளவிற்கு மளமளவெனப் பரவியுள்ளது.
500-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் 6 விமானங்களின் உதவியுடன் தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.