
ஒருவர் தனது பெயரில் அதிகபட்சமாக 9 சிம் கார்டுகள் மட்டுமே வைத்திருக்க வேண்டும் என்ற புதிய கட்டுப்பாட்டை மத்திய தொலைத்தொடர்பு துறை அமல்படுத்தியுள்ளது.
டிஜிட்டல் இன்டலிஜென்ஸ் பிளாட்பார்ம் மூலம் வாடிக்கையாளர் விவரங்களை சரிபார்க்க தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு நவம்பர் 30 வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
வரம்பை மீறி சிம் கார்டுகள் வைத்திருப்பவர்களின் இணைப்புகள் உடனடியாக முடக்கப்படும் என்றும், இது தவறான செயல்களைத் தடுக்க உதவும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.