
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே 16 வயது மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில், அரசு பள்ளி தலைமை ஆசிரியை விமலாதேவி மீது தற்கொலைக்கு தூண்டியது மற்றும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பள்ளி மாற்றுச் சான்றிதழ் பெறுவதற்காக தாயுடன் சென்றபோது, தலைமை ஆசிரியை தாயை இழிவாக பேசியதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, மாணவி கடந்த 25-ம் தேதி பூச்சிபட்டியில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
மாணவியின் தாயார் அளித்த புகாரின் அடிப்படையில் உசிலம்பட்டி தாலுகா காவல் நிலைய போலீசார் இந்த வழக்கை பதிவு செய்து, தற்போது தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.