
8வது மத்திய சம்பள கமிஷனின் கீழ் குறைந்தபட்ச பென்ஷனை ரூ.45,000 ஆக உயர்த்த வேண்டும் என பாரத் பென்ஷனர்ஸ் சமாஜ் கோரிக்கை விடுத்துள்ளது.
தற்போது 7வது சம்பள கமிஷன்படி ஓய்வூதியதாரர்களின் குறைந்தபட்ச அடிப்படை பென்ஷன் மாதம் ரூ.9,000 ஆக உள்ளது.
அகவிலை நிவாரணத்தை 3 மாதங்களுக்கு ஒருமுறை மாற்றி அமைக்கவும், அது 25 சதவீதத்தை தாண்டும்போது அடிப்படை பென்ஷனுடன் இணைக்கவும் இக்குழு வலியுறுத்தியுள்ளது.