
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 12,000 கனஅடியாக நீடிப்பதால், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி பரிசல் இயக்க 10-வது நாளாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தடையை மீறி பரிசல் இயக்கப்படுவதைத் தடுக்க போலீசாரும் தீயணைப்பு படையினரும் காவிரி கரையோரப் பகுதிகளில் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
பரிசல் இயக்கத் தடை நீடித்தாலும், சுற்றுலாப் பயணிகள் அருவிகளில் குளிக்கத் தொடர்ந்து அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.