
திருவொற்றியூர் ஜெய் கோபால் கரோடியா அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 மாணவர் தனுஷ், சக மாணவர்களுடனான மோதலில் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
சிறுநீர் கழிக்கச் சென்றபோது பிளஸ் 1 மாணவர் தானேஷ் கஞ்சா புகைத்ததை தட்டிக்கேட்டதால் ஏற்பட்ட தகராறில், 16 வயது தனுஷ் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
சம்பவம் தொடர்பாக 4 மாணவர்களை போலீசார் கைது செய்துள்ள நிலையில், நியாயம் கேட்டு பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் காவல் நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.