சென்னை பட்டினப்பாக்கம் முள்ளிக்குப்பம் பகுதியில் புதிய தலைமை செயலகம் கட்ட தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளதால் மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
1957-ம் ஆண்டு மீனவர்களுக்கு வீடுகள் கட்டித் தருவதாகக் கூறி கையகப்படுத்தப்பட்ட 20 ஏக்கர் நிலத்தில், தற்போது அரசு ஊழியர் குடியிருப்புகள் உள்ளன.
சாந்தோம் நெடுஞ்சாலையில் ஏற்கனவே போக்குவரத்து நெரிசல் உள்ள நிலையில், தலைமை செயலகம் அமைந்தால் மீன்பிடி தொழில் பாதிக்கப்படும் என மீனவர் நலச் சங்கம் கவலை தெரிவித்துள்ளது.