
டீன் ஏஜ் பயனர்கள் மெட்டா ஏ.ஐ.-யுடன் உரையாடும்போது தற்கொலை அல்லது உயிருக்கு ஆபத்தான மனநிலை தொடர்பான தகவல்களைப் பகிர்ந்தால், அதை ஏ.ஐ. கண்டறிந்து பெற்றோருக்கு எச்சரிக்கை அனுப்பும் வசதி அறிமுகமாகியுள்ளது.
ஒரு நபரின் உயிருக்கு உடனடி ஆபத்து இருப்பதாக ஏ.ஐ. கருதினால், அவசரகால உதவி அமைப்புகளுக்குத் தகவல் தெரிவிக்கும் வசதியையும் மெட்டா உருவாக்கி வருகிறது.
இந்த பாதுகாப்பு அம்சம் தற்போது அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் கனடா ஆகிய நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இந்த ஆண்டு இறுதிக்குள் உலகம் முழுவதும் விரிவுபடுத்தப்படும்.