
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் ரூ.986 கோடி செலவில் அமைக்கப்படும் நாட்டின் 2-வது ராக்கெட் ஏவுதள கட்டுமான பணிகள் 2027 மார்ச் மாதத்திற்குள் நிறைவடையும்.
2,233 ஏக்கர் பரப்பளவில் அமையும் இந்த ஏவுதளத்தின் அன்றாட செயல்பாடுகள் மற்றும் நிர்வாகத்தை தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்க இன்-ஸ்பேஸ் மையம் நடவடிக்கை எடுத்துள்ளது.
ஏவுதளம் தனியாருக்கு விற்கப்படவில்லை என்றும், விண்வெளித் துறையில் தனியார் பங்களிப்பை அதிகரிக்கவே இந்த நிர்வாக மாற்றம் மேற்கொள்ளப்படுவதாகவும் இஸ்ரோ விஞ்ஞானிகள் விளக்கம் அளித்துள்ளனர்.