
பாகிஸ்தான் உள்துறை அமைச்சரும் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவருமான மோசின் நக்வியிடம் இருந்து ஆசிய கோப்பைகளைப் பெற இந்திய அணிகள் மறுத்துவிட்டன.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் காரணமாக நாட்டின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து பிசிசிஐ இந்த தீர்க்கமான கொள்கை முடிவை எடுத்ததாக தேவஜித் சைகியா தெரிவித்தார்.
மகளிர் அணி வென்ற கோப்பை மற்றும் கடந்த ஒரு ஆண்டாக வராமல் இருக்கும் ஆண்கள் அணியின் கோப்பை என இரண்டும் மும்பை பிசிசிஐ அலுவலகத்திற்கு விரைவில் வரும் என்றார்.