
முதல்வரை அவதூறாகப் பேசிய வழக்கில் கைது செய்யப்பட்ட விளாத்திக்குளம் திமுக எம்.எல்.ஏ ஜி.வி.மார்க்கண்டேயனுக்கு சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது.
நீதிபதி ஜி.கே. இளந்திரையன் பிறப்பித்த உத்தரவின்படி, மார்க்கண்டேயன் தூத்துக்குடி காவல் நிலையத்தில் இரண்டு வாரங்களுக்கு தினமும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும்.
முதல்வர் குறித்து இனி அவதூறாகப் பேசமாட்டேன் என எழுத்துப்பூர்வமான உத்தரவாதத்தை மாவட்ட நீதிமன்றத்தில் அளித்த பிறகு, அவர் இன்று பாளையங்கோட்டை சிறையில் இருந்து விடுதலையானார்.