
டாடா மோட்டார்ஸ் தனது அனைத்து கார் மாடல்களின் விலையை செப்டம்பர் 1 முதல் 25,000 ரூபாய் வரை உயர்த்துவதாக அறிவித்துள்ளது.
உற்பத்தி செலவு அதிகரிப்பு மற்றும் பணவீக்க அழுத்தம் காரணமாக இந்த விலை உயர்வு மேற்கொள்ளப்படுவதாகவும், இது இன்ஜின் மற்றும் மின்சார கார்கள் என அனைத்துக்கும் பொருந்தும் என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த ஜூலை மாதம் 1.5 சதவீத விலை உயர்வை அறிவித்திருந்த நிலையில், மூன்று மாத இடைவெளியில் இரண்டாவது முறையாக டாடா நிறுவனம் விலையை உயர்த்தியுள்ளது.