
நீட் போராட்டக்காரர்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கைகளை (FIR) ரத்து செய்யக் கோரி மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு முன்பு சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா இந்த மனுவை தாக்கல் செய்து, அரசியலமைப்பின் 142-வது பிரிவை பயன்படுத்த கோரியுள்ளார்.
மத்திய அரசின் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை எனக் கூறி, போராட்டக்காரர்கள் செப்டம்பர் 5-ம் தேதி டெல்லியில் கண்டன பேரணி நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர்.