
தமிழகத்தின் 7 மாவட்டங்களில் இன்று மாலை 4 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, கோவை, நீலகிரி மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் இந்த மழைப்பொழிவு இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
காற்றழுத்தத் தாழ்வுப்பாதை காரணமாக இந்த மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.