
பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலந்ததால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 135 டாலராக உயர்ந்தபோதும் இந்தியாவில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 125 ரூபாயாக உயரவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்த எத்தனால் கலப்பு நடவடிக்கையால் நுகர்வோருக்கு லிட்டருக்கு 30 ரூபாய் வரை சேமிப்பு கிடைத்துள்ளதாக அரசு விளக்கம் அளித்துள்ளது.
டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் 94 ரூபாய்க்கு விற்கப்பட்டதற்கு இந்த எத்தனால் கலப்பு முறையே காரணம் என மத்திய அரசு நியாயப்படுத்தியுள்ளது.