
தென் கொரியாவில் நடைபெறும் கொரியா மாஸ்டர்ஸ் பாட்மின்டன் தொடரின் ஆண்கள் இரட்டையர் முதல் சுற்றில் இந்தியாவின் புருத்வி, கிருஷ்ண பிரசாத் ஜோடி வெற்றி பெற்றுள்ளது.
இந்திய ஜோடி 42 நிமிடங்கள் நடந்த போட்டியில் தாய்லாந்தின் வோராபோல், சலோயம்பான் ஜோடியை 21-16, 21-18 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தியது.
பெண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ஸ்ருதி, பிரியா ஜோடி ஜப்பானின் ஹிராமோடோ, இஷிகவா ஜோடியிடம் தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறியது.