
விளாத்திகுளம் திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் பொதுக்கூட்டத்தில் பேசியது அவையின் மாண்பைக் குறைப்பதாகக் கூறி, அவர் மீது நடவடிக்கை எடுக்க சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் உத்தரவிட்டுள்ளார்.
அமைச்சர் நிர்மல் குமார் மற்றும் ஆதவ் ஆகியோர் மார்க்கண்டேயன் மீது நடவடிக்கை கோரி சபாநாயகரிடம் கடிதம் அளித்ததைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அவை உரிமைக்குழு அமைக்கப்பட்ட பிறகு, மார்க்கண்டேயனிடம் உரிய விளக்கம் கேட்கப்பட்டு விசாரணை நடத்தப்படும் என சபாநாயகர் ஆகஸ்ட் 7 அன்று அறிவித்தார்.