
ஒடிசாவிலிருந்து சிங்கப்பூர் சென்ற பனாமா நாட்டு சரக்கு கப்பல், கரையில் இருந்து 240 நாடிகல் மைல் தொலைவில் வங்கக்கடலில் எதிர்பாராத விதமாக மூழ்கியது.
கப்பலில் இருந்த 24 மாலுமிகளில் 2 பேர் மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டுள்ள நிலையில், எஞ்சிய 22 மாலுமிகளைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
விபத்துக்குள்ளான கப்பலில் 20 சீனர்கள், 3 மியான்மர் நாட்டினர் மற்றும் ஒரு வங்காளதேசவர் என மொத்தம் 24 பேர் பயணித்ததாக இந்திய கடற்படை தெரிவித்துள்ளது.