
பொள்ளாச்சி அருகே நல்லாம்பள்ளி பகுதியில் சாலையோரம் நின்ற லாரி மீது கார் மோதியதில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் மற்றும் ஒரு நண்பர் என 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
உயிரிழந்தவர்கள் கனகராஜ் (45), அவரது மனைவி பூரணி (39), மகள்கள் ஆர்த்தி (25), நர்மதா (20) மற்றும் உறவினர் ராமன் (35) என கோமங்கலம் போலீஸார் அடையாளம் கண்டுள்ளனர்.
உடுமலை அருகே உள்ள குலதெய்வக் கோயிலுக்குச் சென்று திரும்பியபோது இந்த விபத்து நிகழ்ந்ததாகவும், சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.