உலகளாவிய பேரழிவு அல்லது காலநிலை மாற்றத்தால் பூமிக்கு ஆபத்து ஏற்படும் பட்சத்தில், எந்தெந்த நாடுகள் பாதுகாப்பாக இருக்கும் என்பது குறித்த புதிய ஆய்வை விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர்.
இந்த ஆய்வில், உணவு உற்பத்தி, எரிசக்தி மற்றும் புவியியல் ரீதியான பாதுகாப்பு அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு நாடுகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன.
குறிப்பாக, நியூசிலாந்து மற்றும் சில தீவு நாடுகள் இத்தகைய சூழலில் மனிதர்கள் உயிர்வாழ அதிக வாய்ப்புள்ள இடங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.