
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் மற்றும் அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்து கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
மதுரையில் மூக்கையாதேவரின் 47-வது நினைவு தினத்தில் பங்கேற்ற அவர், தவெக அரசு குதிரைபேரம் பேசி ஆட்சிக்கு வந்ததாகக் குற்றம் சாட்டினார்.
அதிமுக எம்எல்ஏக்கள் 25 பேரை நடுரோட்டில் நிறுத்தியவர்கள் என்றும், தவெக அமைச்சர்களுக்கு அடிப்படை அரசியல் புரிதல் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.