
சென்னை 600028 திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான வெங்கட் பிரபு, தனது திரைப் பயணத்தின் 20-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளார்.
மங்காத்தா, மாநாடு உள்ளிட்ட பல்வேறு படங்களை இயக்கிய அவர், எஸ்பிபி மற்றும் சரண் அளித்த வாய்ப்பே தனது வாழ்க்கையை மாற்றியதாக சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
ஒவ்வொரு படத்தையும் புதிய கதை சொல்லும் பாணியில் உருவாக்க முயற்சிப்பதாகவும், ரசிகர்களின் ஆதரவே புதிய முயற்சிகளை எடுக்கத் துணிச்சலைத் தருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.