
தமிழ் சினிமாவில் தயாரிப்பு பணிகள் முடிந்தும் சுமார் 1000 திரைப்படங்கள் வெளியாக முடியாமல் முடங்கிக் கிடப்பதாக திரைப்படச் சங்கத் தலைவர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்துள்ளார்.
ஓடிடி நிறுவனங்கள் படங்களின் வெளியீட்டுத் தேதியைத் தீர்மானிக்கும் அதிகாரத்தைக் கொண்டுள்ளதால், முன்னணி நடிகர்களின் படங்கள் கூட சிக்கலுக்கு உள்ளாவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
முடங்கிக் கிடக்கும் 1000 படங்களில் குறைந்தது 200 தரமான திரைப்படங்களாவது இருக்கும் என்றும், அவற்றை வெளியிட புதிய ஓடிடி நிறுவனங்கள் முன்வர வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.