வடிவழகன் என்பவர் 'சுனோ ஏஐ' (Suno AI) கருவியின் உதவியுடன் இரண்டறை நிமிடங்கள் ஓடும் 'சிறிய தீவு எங்கள் வீடு' என்ற தேசிய தினத் தமிழ்ப் பாடலை உருவாக்கியுள்ளார்.
இப்பாடலை உருவாக்க 30 நிமிடங்களில் வரிகளை எழுதி, காட்சிகளைப் பிழையின்றி அமைக்க 20 முதல் 25 முறை மாற்றங்களைச் செய்து தொழில்நுட்ப ரீதியாக முழுமையாக்கியுள்ளார்.
மனிதவளம் மற்றும் பொருள் செலவைக் குறைக்கும் நோக்கில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி, இளைய தலைமுறையினரை மொழிச் செயல்பாடுகளில் ஈடுபட ஊக்குவிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.