
குவைத்தில் உள்ள அமெரிக்க படைத்தளத்தை குறிவைத்து ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது, ஆனால் குவைத் வான் பாதுகாப்பு அமைப்பு அவற்றை நடுவானில் சுட்டு வீழ்த்தியது.
கடந்த பிப்ரவரி 28 அன்று அமெரிக்கா-இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தியதில் இருந்து இரு தரப்புக்கும் இடையே மோதல் அதிகரித்து வருகிறது.
ஜோர்டானில் உள்ள அமெரிக்க படைத்தளம் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதற்கு பதிலடியாக அமெரிக்கா ஈரான் மீது தாக்குதல் நடத்திய நிலையில், இந்த சம்பவம் மத்திய கிழக்கில் பதற்றத்தை அதிகரித்துள்ளது.