
சென்னை நாரத கான சபாவில் நடைபெற்ற குரு ஸ்ரீ உடுப்பி லக்ஷ்மி நாராயணனின் 100-வது ஆண்டு விழாவில் பிரபு தேவா ஆடிய பரதநாட்டியம் சமூக வலைதளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பிரபு தேவா பரதநாட்டியத்தை முறைப்படி ஆடவில்லை என்றும், இந்த வாய்ப்பை ஒரு இளம் நடனக் கலைஞருக்கு வழங்கியிருக்கலாம் என்றும் நடிகை ப்ரீத்தி சஞ்சீவ் தனது பதிவில் விமர்சித்துள்ளார்.
இந்த விவகாரம் நடனக் கலைஞர்கள் மத்தியில் விவாதமாக மாறியுள்ள நிலையில், பிரபு தேவாவின் நடனத்திற்கு ஆதரவாகவும் எதிராகவும் சமூக வலைதளங்களில் கருத்துகள் பதிவிடப்பட்டு வருகின்றன.