
பணி நிரந்தரம் மற்றும் ஊதிய உயர்வு கோரி டாஸ்மாக் பணியாளர்கள் அறிவித்திருந்த மாநிலம் தழுவிய வேலைநிறுத்தப் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மது விலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் விக்னேஷ் நடத்திய பேச்சுவார்த்தையில், வரும் 31-ம் தேதி மானியக் கோரிக்கை விவாதத்தின் போது கோரிக்கைகள் குறித்து அறிவிக்கப்படும் என அரசு உறுதியளித்துள்ளது.
அரசு தரப்பு வாக்குறுதியை ஏற்று, தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினர் போராட்டத்தை ஒத்திவைப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.