
ஸ்மார்ட்போன் திடீரென ஹேங் ஆவதை ஒரு தொழில்நுட்பக் கோளாறாகக் கருதாமல், ஹேக்கர்கள் பயன்படுத்தும் புதிய சைபர் கிரைம் மோசடியாகக் கருத வேண்டும் என குவிக் ஹீல் நிறுவனம் எச்சரிக்கிறது.
APK ஃபைல்களைப் பதிவிறக்கம் செய்ய வைத்து, போனின் ஆக்ஸசிபிலிட்டி அனுமதிகளைத் திருடி, பயனர்களின் வங்கி OTP மற்றும் யுபிஐ பின் எண்களை ஹேக்கர்கள் திருடுகின்றனர்.
போன் சந்தேகத்திற்கு இடமான வகையில் ஹேங் ஆனால் உடனடியாக இணைய இணைப்பைத் துண்டித்துவிட்டு, 1930 என்ற சைபர் கிரைம் உதவி எண்ணிற்குப் புகார் அளிக்க வேண்டும்.