
ஓமன் நாட்டின் அல் கசாப் நகருக்கு வடகிழக்கே சுமார் 37 கிலோமீட்டர் தொலைவில் சென்ற அடையாளம் தெரியாத சரக்கு கப்பல் மீது மர்ம ஆயுதத்தால் தாக்குதல் நடத்தப்பட்டதாக பிரிட்டனின் UKMTO மற்றும் Ambrey அமைப்புகள் தெரிவித்துள்ளன.
உலகின் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு போக்குவரத்தில் ஐந்தில் ஒரு பங்கு பங்களிக்கும் முக்கிய வழித்தடமான ஹோர்முஸ் நீரிணையில் இந்தத் தாக்குதல் நடந்துள்ளதால் பிராந்திய பாதுகாப்பு அச்சம் அதிகரித்துள்ளது.
ஈரானுடன் பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறிய நிலையில், அதனை மறுத்துள்ள ஈரான் செய்தித் தொடர்பாளர் எஸ்மாயில் பகாயி, ஓமனுடன் மட்டுமே புதிய கடல் வழித்தடம் குறித்து ஆலோசித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.