
இந்தியக் குடும்பங்களிடம் சுமார் ₹315 லட்சம் கோடி மதிப்புள்ள தங்கம் ஆபரணங்களாகவும் நாணயங்களாகவும் வீடுகளில் முடங்கிக் கிடப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
1997-2012 காலகட்டத்தில் பிறந்த ஜென் Z தலைமுறையினர், தங்கத்தை வெறும் பாரம்பரிய ஆபரணமாகப் பார்க்காமல் டிஜிட்டல் முதலீட்டுச் சொத்தாக மாற்றத் தொடங்கியுள்ளனர்.
வீடுகளில் முடங்கியுள்ள இந்தத் தங்கத்தை நிதி அமைப்புகளுக்குள் கொண்டு வருவதன் மூலம் நாட்டின் மூலதன உருவாக்கம் வலுப்பெற்று, தங்க இறக்குமதி குறைய வாய்ப்புள்ளது.