
ஆன்லைனில் யுபிஐ வாயிலாக 2 ஆயிரம் ரூபாய் வரையிலான பணப்பரிமாற்றத்திற்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கக்கூடாது என்று சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
மக்கள் 2 ஆயிரம் ரூபாய் அல்லது அதற்கும் குறைவாக பணம் செலுத்து யாரிடமிருந்தும் எந்தவொரு வங்கி அல்லது நிதியமைப்புகளும் கட்டணம் வசூலிக்கக்கூடாது என மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ் எம்பி ராகுல், இது கடைக்காரர்கள் மீது எம்டிஆர் விதிக்க வழிவகுத்து இறுதியில் வாடிக்கையாளர்களைப் பாதிக்கும் என்று கூறியுள்ளார்.