
வங்கதேச அதிபர் முகமது ஷஹாபுதீன் உடல்நலக்குறைவால் விலகியதைத் தொடர்ந்து, புதிய அதிபரைத் தேர்ந்தெடுக்க இன்று (ஆகஸ்ட் 20) தேர்தல் நடைபெறுகிறது.
ஆளும் பிஎன்பி கட்சியின் சார்பில் மிர்சா ஃபக்ருல் இஸ்லாம் ஆலம்கீர் (78) மற்றும் 11 எதிர்க்கட்சிகள் கூட்டணியின் சார்பில் ஒலி அகமது ஆகியோர் வேட்பாளர்களாகப் போட்டியிடுகின்றனர்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் புதிய அதிபர் நாளை (ஆகஸ்ட் 21) பதவியேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது; கடந்த 35 ஆண்டுகளாகப் போட்டியின்றி அதிபர் தேர்ந்தெடுக்கப்பட்டு வந்த நிலையில் இது முக்கியத் தேர்தலாகும்.