
தேனி மாவட்டம் மேகமலை புலிகள் சரணாலய வனப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பு கட்டுமானங்களை இடித்து அகற்றவும், அங்குள்ள இலவம் பஞ்சு தோட்டங்களை முழுமையாக நீக்கவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா அடங்கிய அமர்வு, ஆக்கிரமிப்பாளர்களின் மின்சாரம் மற்றும் குடிநீர் இணைப்புகளைத் துண்டிக்க உத்தரவிட்டு, இதுகுறித்த நிலை அறிக்கையை 2 வாரங்களில் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு ஆணையிட்டது.
பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் 4,600-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிப்பதாகவும், அவர்களுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்து அப்புறப்படுத்த 3 மாத கால அவகாசம் தேவை என்றும் தமிழக அரசு தரப்பில் வழக்கறிஞர் ஜெய்தீப் குப்தா கோரிக்கை விடுத்தார்.