
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர் என்ற சாதனையை ரிஷப் பந்த் படைத்துள்ளார்.
இதுவரை 42 போட்டிகளில் விளையாடியுள்ள ரிஷப் பந்த் 2,948 ரன்கள் எடுத்து, 2,917 ரன்கள் எடுத்த ஷுப்மன் கில்லை முந்தியுள்ளார்.
இந்த பட்டியலில் ரோஹித் சர்மா 2,716 ரன்களுடன் மூன்றாவது இடத்திலும், ரவீந்திர ஜடேஜா 2,675 ரன்களுடன் நான்காவது இடத்திலும் உள்ளனர்.