
சட்டவிரோத சூதாட்ட செயலிகளை விளம்பரப்படுத்தியதாகக் கூறப்படும் வழக்கில், நடிகை நிதி அகர்வால் ஐதராபாத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.
ராணா டகுபதி, பிரகாஷ் ராஜ், விஜய் தேவரகொண்டா உள்ளிட்ட 21 பிரபலங்கள் மீது பொது சூதாட்ட சட்டத்தை மீறியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு தொழிலதிபர் பி.எம். பணிந்திர சர்மா அளித்த புகாரின் அடிப்படையில், இளைஞர்களை சூதாட்டத்திற்குத் தூண்டும் வகையில் விளம்பரம் செய்ததாக இந்த விசாரணை நடைபெறுகிறது.