
பல்லாவரத்தில் நீட் தேர்வு அழுத்தத்தால் சாய் அபினவ் என்ற மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மிகுந்த வேதனையளிப்பதாக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.
மாணவர்களின் தொடர் மரணங்களை அலட்சியப்படுத்தும் மத்திய பா.ஜ.க. அரசை வன்மையாகக் கண்டிப்பதாக அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
தற்கொலை எதற்கும் தீர்வல்ல என்றும், நீட் தேர்வுக்கு எதிராக அனைவரும் ஓரணியில் திரண்டு போராட வேண்டும் என்றும் மாணவர்களுக்கு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.