
பண்ருட்டி அருகே மாளிகைமேட்டில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கடந்த 15 நாட்களாக கொள்முதல் நடைபெறவில்லை.
இதனால் சுமார் 2000 மூட்டை நெல் திறந்த வெளியில் குவித்து வைக்கப்பட்டுள்ளதால், மழை பெய்தால் நெல் வீணாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
அனுமதி கிடைக்காத காரணத்தால் கொள்முதல் நிறுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிலையில், விவசாயிகள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.