
தமிழ்நாட்டின் அனுமதி இன்றி மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடகாவின் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளிக்கக்கூடாது என பிரதமர் மோடியிடம் முதல்வர் விஜய் வலியுறுத்தியுள்ளார்.
2018-ம் ஆண்டு உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி கடைமடை மாநிலமான தமிழ்நாட்டின் அனுமதி இல்லாமல் அணை கட்ட முடியாது என்பதை முதல்வர் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சர் ராஜ்பூஷன் நாடாளுமன்றத்தில் அளித்த தவறான பதிலை திரும்பப் பெறவும், கூட்டாட்சித் தத்துவத்தை காக்கவும் பிரதமர் தலையிட வேண்டும் என கோரப்பட்டுள்ளது.