
கோவை தனியார் கல்லூரியில் என்ஜினீயரிங் மாணவர் அமுதன் கொலை செய்யப்பட்ட வழக்கில், தலைமறைவாக இருந்த மேலும் 4 மாணவர்கள் உட்பட மொத்தம் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த 19 வயது மாணவர் அமுதன் கடந்த 10-ந்தேதி சக மாணவர்களால் தாக்கப்பட்ட நிலையில், தற்போது வன்கொடுமைத் தடுப்புச் சட்டப்பிரிவு வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளது.
சமூக நீதித்துறை சார்பில் அமுதனின் குடும்பத்திற்கு ரூ. 6 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டுள்ள நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் திங்கள்கிழமை சட்டப்பேரவையில் பேசவுள்ளார்.